திருச்செந்தூர் முருகன் கோயிலில் வரும் 31-ம் தேதி கந்தசஷ்டி விழா தொடங்க உள்ளதையடுத்து முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம் அடுத்த மாதம் 5-ம் தேதி நடைபெறவுள்ளது

Oct 25 2016 8:05AM
எழுத்தின் அளவு: அ + அ -

திருச்செந்தூர் முருகன் கோயிலில் வரும் 31-ம் தேதி கந்தசஷ்டி விழா தொடங்க உள்ளதையடுத்து, முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம் அடுத்த மாதம் 5-ம் தேதி நடைபெறவுள்ளது.

முருகனின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் முருகன் கோயிலில் ஆண்டுதோறும் கந்தசஷ்டி விழா வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டிற்கான விழா வரும் 31-ம் தேதி தொடங்கவுள்ளது. முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம் நிகழ்ச்சி அடுத்த மாதம் 5-ம் தேதி நடைபெறுகிறது. இந்த விழாவில் பங்கேற்க தமிழகம் முழுவதிலும் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருவார்கள் என்பதால், அவர்களின் வசதிக்காக குடிநீர், சுகாதாரம், பாதுகாப்பு, பேருந்து உள்ளிட்ட அடிப்படை வசதிகள் குறித்து பல்வேறு முன்னேற்பாடுகள் முழுவீச்சில் செய்யப்பட்டு வருகின்றன.

இதனிடையே, பெரம்பலூர் அருகே உள்ள சேத்து மாரியம்மன் கோயில் தேர்த் திருவிழா வெகு சிறப்பாக நடைபெற்றது. கடந்த 16-ம் தேதி காப்பு கட்டுதலுடன் தொடங்கிய இந்த விழாவினையொட்டி, நாள்தோறும் அம்மன் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இந்த நிகழ்ச்சியில் ஏராளமானோர் பங்கேற்று அம்மனை மனமுருக வழிபட்டு சென்றனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00