கும்பகோணம் மகாமகப் பெருவிழாவை முன்னிட்டு, 7 திருக்கோவில்களில் யாகசாலை பூஜைகள் தொடங்கியன
Nov 27 2015 1:14PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கும்பகோணம் மகாமகப் பெருவிழாவை முன்னிட்டு, 7 திருக்கோவில்களில் யாகசாலை பூஜைகள் தொடங்கியுள்ளன.
தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில், அடுத்த ஆண்டு ஃபிப்ரவரி மாதம் 22-ம் தேதி மகாமகப் பெருவிழா நடைபெறவுள்ளது. இதனையொட்டி இப்பகுதியில் உள்ள 69 திருக்கோவில்களுக்கு, 13 கோடி ரூபாய் மதிப்பில் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு, 39 திருக்கோயில்களுக்கு கும்பாபிஷேகம் நடைபெற்றது. இந்நிலையில் ஸ்ரீநாகேஸ்வரர் ஆலயம், மேலக்காவேரி ஸ்ரீவரதராஜ பெருமாள் ஆலயம், ஸ்ரீநவநீத கிருஷ்ணன் ஆலயம் உள்ளிட்ட 7 கோயில்களுக்கு, நாளை மறுநாள் கும்பாபிஷேகம் நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு காவிரியிலிருந்து எடுத்துவரப்பட்ட புனித நீரால், யாகசாலை பூஜைகள் தொடங்கியுள்ளன.
இதேபோல், புதுச்சேரி லாஸ்பேட்டை சாந்தி நகர் ஸ்ரீவலம்புரி வெற்றி விநாயகர் ஆலயத்தில் கும்பாபிஷேகத்திற்கான திருப்பணிகள் முடிவடைந்த நிலையில் கடந்த 25ஆம் தேதி யாகசாலை பூஜையுடன் விழா தொடங்கியது. இதனையடுத்து ஆலய கலசங்களில் புனித நீர் ஊற்றப்பட்டு, மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில் ஏராளமானோர் சுவாமி தரிசனம் செய்தனர்.