மகாமகப் பெருவிழாவிற்காக தயாராகும் கும்பகோணம் நகரம் - அனைத்து துறைகள் சார்பில் முன்னேற்பாடுகள் தீவிரம்
Nov 26 2015 8:00AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
மகாமகப் பெருவிழாவை முன்னிட்டு முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா உத்தரவின்பேரில், கும்பகோணம் நகராட்சிப் பகுதியில் உள்ள அனைத்து வார்டுகளிலும் சிறப்பு துப்புரவுப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.
கும்பகோணத்தில் வரும் பிப்ரவரி மாதம் மகாமகப் பெருவிழா நடைபெறவுள்ளது. 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறம் இவ்விழாவுக்காக முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா 200 கோடி ரூபாய் சிறப்பு நிதி ஒதுக்கீடு செய்துள்ளார். தொடர்ந்து அனைத்துத் துறையினரும் போர்க்கால அடிப்படையில் முன்னேற்பாடு பணிகளில் ஈடுபட்டுள்ளனர். இதன் ஒரு பகுதியாக கும்பகோணம் நகராட்சியில் உள்ள 45 வார்டுகளிலும் கழிவு நீரை அகற்றுதல், மண்மேடுகளை அப்புறப்படுத்துதல் போன்ற தூய்மைப் பணிகளை நகராட்சி நிர்வாகம் தொடங்கியுள்ளது. 75க்கும் மேற்பட்ட துப்புரவுப் பணியாளர்கள் இப்பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். சுமார் ஒரு மாத காலத்தில் அனைத்து வார்டுகளிலும் தூய்மைப் பணி நடத்தப்பட்டு, நகரம் முழுவதும் சுத்தப்படுத்தப்படும் என நகர்மன்றத் தலைவர் தெரிவித்தார். கடந்த 2013-2014-ம் ஆண்டுக்கான சிறந்த நகராட்சியாக கும்பகோணம் நகராட்சி தேர்வு செய்யப்பட்டு, முதலமைச்சரிடம் விருது பெற்றது குறிப்பிடத்தக்கது.