தமிழகம் முழுவதும் கார்த்திகை தீபத்திருநாளையொட்டி கோயில்களில் தீபங்கள் ஏற்றப்பட்டன : சொக்கர்பனை கொளுத்தும் நிகழ்ச்சி விமரிசையாக நடைபெற்றது
Nov 26 2015 7:41AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
முருகப் பெருமானின் 2-ம் படை வீடான திருச்செந்தூர் முருகன் கோயிலில், நாரணி தீப வழிபாட்டுடன், 25 அடி உயர சொக்கர் பனையில் மஹாருத்ர தீபம் ஏற்றப்பட்டது.
3-ம் படை வீடான பழனி மலைக்கோயிலில், பரணி தீபமும், மஹா தீபமும் ஏற்றப்பட்டன. இதனைத் தொடர்ந்து சொக்கர்பனை கொளுத்தும் நிகழ்ச்சி விமரிசையாக நடைபெற்றது.
திருச்சி சமயபுரம் மாரியம்மன் ஆலயத்திலும், உத்தமர்கோயில் பிச்சாண்டவர் கோயிலிலும் சொக்கர்பனை நிகழ்ச்சி நடைபெற்றது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள தாணு மாலைய சுவாமி கோவிலில் ரத வீதி உலா மற்றும் சொக்கர் பனை நிகழ்ச்சி நடைபெற்றது.
வேலூர் கோட்டையில் உள்ள ஜலகண்டேஸ்வரர் கோயிலில் மகா தீபம் ஏற்றப்பட்டது. பின்னர், 10 அடி உயரத்தில் மூங்கில் மற்றும் ஓலைகளால் அமைக்கப்பட்டிருந்த சொக்கர்பனை கொளுத்தப்பட்டது.
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் திருக்கோயிலில் மகா தீபம் ஏற்றப்பட்டு, சொக்கர்பனை கொளுத்தும் நிகழ்ச்சி விமரிசையாக நடைபெற்றது.
தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள அருள்மிகு பெரியநாயகி உடனுறை கைலாசநாதர் மலைக்கோயிலில் மகா கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டது.
திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் ஸ்ரீஅருணாசலேஸ்வரர் கோயில், கரூர் அருள்மிகு கல்யாண பசுபதீஸ்வரர் திருக்கோயில் உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு ஆலயங்களில் கார்த்திகை தீபத் திருவிழா, சொக்கர்பனை நிகழ்ச்சி சிறப்பாக கொண்டாடப்பட்டது.