திருகார்த்திகை தீபத் திருவிழாவையொட்டி, திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலில் பிச்சாண்டவர் உற்சவம் : வாணவேடிக்கையுடன் வெகுவிமரிசையாக நடந்தேறியது
Nov 24 2015 10:49AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
திருகார்த்திகை தீபத் திருவிழாவையொட்டி, திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலில் தங்கமேருவில் பிச்சாண்டவர் உற்சவம், வாணவேடிக்கை நிகழ்ச்சியுடன் வெகுவிமரிசையாக நடைபெற்றது.
பிரசித்திபெற்ற திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலில், திருகார்த்திகை தீபத் திருவிழா, கடந்த 16-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. விழாவின் 8-வது நாளான நேற்றிரவு, தங்கமேருவில் பிச்சாண்டவர் எழுந்தருளும் உற்சவம் வெகுசிறப்பாக நடைபெற்றது. தொடர்ந்து, உண்ணாமுலையம்மன் உடனாகிய அண்ணாமலையார், குதிரை வாகனத்தில் எழுந்தருளி, வாணவேடிக்கையுடன் 4 மாட வீதிகள் வழியாக வலம்வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இந்நிகழ்ச்சியில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். விழாவின் 10-ம் நாள் நிகழ்ச்சியாக, நாளை அதிகாலை 4 மணிக்கு பரணி தீபமும், மாலை 6 மணிக்கு 2,668 அடி உயரமுள்ள மலை உச்சியில் மஹா தீபமும் ஏற்றப்பட உள்ளன.