முதலமைச்சர் ஜெயலலிதாவின் உத்தரவின்படி திருக்கோயில்களுக்கு பூஜைபொருட்கள் வழங்கும் பணி தீவிரம்
Oct 9 2015 8:38AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவின் உத்தரவின்படி திருக்கோயில்களுக்கு பூஜைபொருட்கள் வழங்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
தமிழகத்தில் உள்ள நலிவடைந்த சிறு கோயில்களுக்கு பூஜை பொருட்கள் வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா தொடங்கி வைத்தார். அதன்படி விழுப்புரத்தில் உள்ள ஆஞ்சநேயர் கோவிலில், கப்பூர், முத்தாப்பாளையம், தளவானூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் உள்ள 59 திருக்கோயில்களுக்கு பூஜை பொருட்கள் வழங்கப்பட்டன. பூஜை பொருட்களை பெற்றுக்கொண்ட கோயில் பூசாரிகள் முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவிற்கு நெஞ்சார்ந்த நன்றி தெரிவித்து கொண்டனர்.
தூத்துக்குடியில் இந்து அறநிலைய துறைக்கு சொந்தமான பழமையான வைகுண்டபதி பெருமாள் கோவிலில் மேற்கு வாயிலில் சிலர் ஆக்கிரமித்து சுவர் கட்டி இருந்தனர். இதனால் 60 ஆண்டுகளாக மேற்கு வாயில் திறக்கப்படாமல் இருந்தது. இந்து அறநிலையத்துறை சார்பில் 50 லட்சம் ரூபாய் மதிப்பில் புதிய கதவுகள் பொருத்தப்பட்டன. பின்னர் சிறப்பு பூஜைகள் நடத்தி திறந்து வைக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் ஆழ்வார்திருநகரி பெருமானார் ஜீயர் சுவாமிகள் கலந்து கொண்டார்.