திருமலை திருப்பதியில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம் - இலவச தரிசனத்திற்குச் செல்வோர் நீண்டநேரம் காத்திருப்பு
Oct 3 2015 11:42AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
திருப்பதியில் பக்தர்களின் வருகை அதிகரித்துள்ளதால், இலவச தரிசனத்திற்கு செல்வோர் நீண்டநேரம் காத்திருக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
திருமலை திருப்பதி கோயிலில், நாளுக்கு நாள் பக்தர்களின் வருகை அதிகரித்துள்ளது. 3 நாட்கள் விடுமுறை என்பதால் நேற்று ஆயிரக்கணக்கானோர் திருப்பதியில் குவிந்தனர். இதன்காரணமாக இலவச தரிசனத்திற்குச் செல்லும் பக்தர்கள் சுமார் 18 மணிநேரம் நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டிய சூழ்நிலை நிலவி வருகிறது. பக்தர்களின் பாதுகாப்பு நலன் கருதி போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். இலவச தரிசனத்திற்காக சிறப்பு டிக்கெட் கவுண்டர்கள் திறக்கப்பட உள்ளதாகவும், பக்தர்களின் சிரமத்தை நீக்கவும் திருப்பதி தேவஸ்தானம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.