ஆர்.கே. நகர் தொகுதியில் முதலமைச்சர் ஜெயலலிதா அமோக வெற்றி பெற்றதையடுத்து திருவண்ணாமலையில் 14 கிலோ மீட்டர் கிரிவல பாதையில் அங்கபிரதட்சனம் செய்து அ.இ.அ.தி.மு.க நிர்வாகி நேர்த்திக்கடன்
Jul 2 2015 12:34PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா, ஆர்.கே.நகர் சட்டமன்றத் தொகுதியில் வரலாறு காணாத வெற்றி பெற்றதையடுத்து, அ.இ.அ.தி.மு.க நிர்வாகி ஒருவர், திருவண்ணாமலையில் உள்ள 14 கிலோ மீட்டர் கிரிவல பாதையில் அங்கபிரதட்சனம் செய்து நேர்த்திக்கடன் செலுத்தியுள்ளார்.
டாக்டர் ராதாகிருஷ்ணன் நகர் சட்டமன்றத் தொகுதியில் முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா வரலாறு காணாத வெற்றி பெற்றதையடுத்தும், இடர்பாடுகளில் இருந்து விடுபட்டு மீண்டும் முதலமைச்சராக பதவியேற்றதையடுத்தும், திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் ஒன்றியத்தைச் சேர்ந்த பீமாநந்தல் ஊராட்சி அ.இ.அ.தி.மு.க. செயலாளர் அருணாசலம், ஆனி மாத பௌர்ணமியை முன்னிட்டு 14 கிலோ மீட்டர் தூரம் கொண்ட கிரிவல பாதையில் அங்கப்பிரதட்சணம் மேற்கொண்டு நேர்த்திக்கடன் செலுத்தினர். இந்த வேண்டுதலில் தமிழ்நாடு கூட்டுறவு ஒன்றிய தலைவர் திருமதி. அமுதா மற்றும் கழக தொண்டர்களும் கலந்துகொண்டு தங்கள் வேண்டுதல்களை நிறைவேற்றினர்.