சபரிமலைக்கு வரும் பக்தர்கள் வனப்பகுதிகளில் கூடாரம் அமைத்து தங்குவதற்கு தடை : தரிசனம் முடித்து கீழே இறங்காதவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தேவசம்போர்டு எச்சரிக்கை
Jan 4 2024 7:14PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கேரள மாநிலம் சபரிமலைக்கு வரும் பக்தர்கள் வனப்பகுதிக்குள் கூடாரம் அமைத்து தங்கினால் நடவடிக்கை எடுக்கப்படும் என திருவிதாங்கூர் தேவசம்போர்டு எச்சரிக்கை விடுத்துள்ளது. சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு தினசரி லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர். பூஜை காலத்தில் கூட்டம் அதிகரித்து வருவதால், பக்தர்கள் பல மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்கின்றனர். இந்நிலையில் சபமரிமலைக்கு வரும் பக்தர்கள் சாமி தரிசனம் முடித்தவுடன் மலை இறங்க வேண்டும் என்றும், சபரிமலை வளாகத்திலேயே தங்கினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் திருவிதாங்கூர் தேவசம்போர்டு அறிவித்துள்ளது. மேலும், சபரிமலைக்கு வரும் பக்தர்கள் கூடாரம் அமைத்து சமையல் பணியில் ஈடுபடுவதால் எளிதில் காட்டுத்தீ ஏற்படும் அபாயம் உள்ளதால், வனப்பகுதியில் கூடாரம் அமைக்கவும் வனத்துறையினர் தடை விதித்துள்ளனர்.