மதுரை மீனாட்சியம்மன் கோவில் அஷ்டமி சப்பர நிகழ்ச்சி... கயிலாய வாத்தியங்கள் முழங்க சுவாமி வெளி வீதிகளில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருளாசி
Jan 4 2024 1:35PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயிலில் சப்பரம் அஷ்டமி தேர் திருவிழா வெகுவிமரிசையாக நடைபெற்றது.
மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயிலில் ஆண்டுதோறும் மார்கழி மாத தேய்பிறை அஷ்டமி நாளில் சுவாமியும், அம்மனும் வீதியுலா வரும் அஷ்டமி சப்பர விழா கோலாகமாக நடைபெறுவது வழக்கம். இந்தாண்டுக்கான சப்பர விழாவில் சுவாமி சுந்தரேசுவரர் கோயிலில் சுவாமிக்கு வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து, சுவாமி சுந்தரேசுவரர் பிரியாவிடையுடன் ஒரு சப்பரத்திலும், மீனாட்சி அம்மன் தனி சப்பரத்திலும் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு பரசத்துடன் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.