சபரிமலையில் வரும் 10-ம் தேதி முதல் ஸ்பாட் புக்கிங்கை நிறுத்த முடிவு : பக்தர்களின் கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த தேவசம்போர்டு நடவடிக்கை
Jan 2 2024 4:38PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
சபரிமலை ஐயப்பன் கோயிலில் வரும் 10-ம் தேதி முதல் ஸ்பாட் புக்கிங்கை நிறுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. சபரிமலை ஐயப்பன் கோயில் மண்டல பூஜைக்கு பின் மகர விளக்கு பூஜைக்காக கடந்த டிசம்பர் 31ம் தேதி திறக்கப்பட்டது. பக்தர்களின் கூட்டம் அதிகரித்துள்ளதால் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாமல் கேரள காவல்துறையினர் திணறி வருகின்றனர். அதனை கட்டுப்படுத்தும் விதமாக பக்தர்கள் பம்பையில் ஸ்பாட் புக்கிங் செய்து தரிசனம் மேற்கொண்டு வரும் நடைமுறையை வரும் 10-ம் தேதி முதல் நிறுத்த தேவசம்போர்டு முடிவு செய்துள்ளது.