தஞ்சாவூரில் யோகநாயகி உடனாய அட்சயநாத சுவாமி கோயில் திருக்கல்யாண நிகழ்ச்சி : திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமியையும் அம்பாளையும் வழிபட்டனர்
May 31 2023 6:04PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
தஞ்சாவூர் மாவட்டம் திருமாந்துறையில் அமைந்துள்ள அட்சயநாத சுவாமி கோயிலில், வைகாசி விசாகப் பெருவிழாவையொட்டி, திருக்கல்யாண நிகழ்ச்சி கோலாகலமாக நடைபெற்றது. புஷ்ப அலங்காரத்தில் யோகநாயகி உடனாய அட்சயநாத சுவாமி அலங்கார மண்டபத்தில் எழுந்தருளினார். பெண்கள், சீர் வரிசைப் பொருட்களை கோயில் மண்டபத்திற்கு எடுத்துவந்ததைத் தொடர்ந்து மேள வாத்தியங்கள் முழங்க திருக்கல்யாணம் நடைபெற்றது.