வெகு விமரிசையாக நடைபெற்ற காளை விடும் திருவிழா : 15-க்கும் மேற்பட்டோர் காயம்
May 28 2023 4:49PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
திருவண்ணாமலை மாவட்டம் அரணி அருகே காளை விடும் திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது. தமிழகம் முழுவதும் காளைவிடும் திருவிழாவிற்கு அனுமதி உள்ள நிலையில், திருவண்ணாமலையில் மட்டும் அனுமதி மறுக்கப்பட்டது. இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், நிபந்தனைகளோடு காளை விடும் திருவிழா நடத்த நீதிமன்றம் உத்தரவிட்டது. இதில், திருவண்ணாமலை, வேலூர், ராணிப்பேட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து 300க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்றன. சீறிப்பாய்ந்த காளைகளை இளைஞர்கள் ஆர்வத்துடன் தழுவி பிடித்தனர். இதனை ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கண்டு ரசித்தனர்.