அக்னி நட்சத்திரம் தோஷ நிவர்த்தியை முன்னிட்டு 1008 கலசாபிஷேகம் : தங்க கொடிமரம் முன்பு மிகப்பெரிய யாகசாலை அமைத்து முதல் காலயாக பூஜை
May 28 2023 3:28PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் திருக்கோயிலில் அக்னி நட்சத்திரம் தோஷ நிவர்த்தியை முன்னிட்டு சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க 1008 கலசாபிஷேகம் வெகு விமர்சியாக நடைபெற்றது. கடந்த 4 ஆம் தேதி அக்னி நட்சத்திரம் தொடங்கிய நாள் முதல் அண்ணாமலையாருக்கு தாராபிஷேகம் தினந்தோறும் நடைபெற்று வந்தது. அக்னி நட்சத்திரம் தோஷ நிவர்த்தி பெறுவதை முன்னிட்டு சிவாச்சாரியார்கள் உண்ணாமலை அம்மன் சன்னதி அருகே உள்ள தங்க கொடிமரம் முன்பு மிக பெரிய யாகசாலை அமைத்து முதல் கால யாக பூஜைகளை நடத்தினர். பின்னர் வேத மந்திரங்கள் முழங்க 1008 கலசாபிஷேகம் வெகு விமர்சியாக நடைபெற்றது.
மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் உள்ள பத்திரகாளியம்மன் கோயிலின் உற்சவ விழாவை முன்னிட்டு 500க்கும் அதிகமான பெண்கள் முளைப்பாரி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். உசிலம்பட்டி நகராட்சிக்குட்பட்ட மேலப்புதூரில் அமைந்துள்ள பத்திரகாளியம்மன் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் வைகாசி உற்சவ திருவிழா 4 நாட்கள் வெகுவிமர்சையாக கொண்டாடப்படுவது வழக்கம். அந்த வகையில் சுமார் 500க்கும் மேற்பட்ட பெண்கள் முளைப்பாரி எடுத்து முக்கிய வீதிகள் வழியாக வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.
திருவாரூர் அருகே குடவாசல் வீரமாகாளியம்மன் கோவிலில் அம்மனுக்கு 15க்கும் மேற்பட்ட டிராக்டர்களில் சீர்வரிசை பொருட்களை ஊர்வலமாக எடுத்துச் சென்றனர். குடவாசல் வீரமாகாளியம்மன் கோவிலில் ஐந்து வருடங்களுக்கு ஒருமுறை ஐந்து நாட்கள் மட்டுமே பார்க்கும் அம்மனின் பூஜை நடைபெற்று வருகிறது. சுமார் 15க்கும் மேற்பட்ட டிராக்டர்களில் மஞ்சள், வளையல் மற்றும் அனைத்து வகை பழங்கள் வரிசைத்தட்டுகளை வைத்து குடவாசல் நகரப்பகுதியில் உள்ள அனைத்து வீதிகளிலும் உலா வந்தனர். பின்னர் வாண வேடிக்கையுடன் வீடுகள் தோறும் சிவன், காளி, அம்பாள் நடனங்கள் நடைபெற்றது.