திருவண்ணாமலையில் தை கிருத்திகை முன்னிட்டு முருக பக்தர்கள் புஷ்ப காவடி ஏந்தி வழிபாடு - திருக்கோயிலின் 4 மாட வீதிகளை சுற்றி வந்து வழிபட்ட பக்தர்கள்
Jan 30 2023 5:58PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
திருவண்ணாமலையில், தை கிருத்திகை முன்னிட்டு முருக பக்தர்கள் 251 பேர் புஷ்ப காவடி ஏந்தி வழிபாடு நடத்தினர். நினைத்தாலே முக்தி தரும் அண்ணாமலையார் கோயிலில் ஐந்தாம் பிரகாரத்தில் உள்ள கோபுரத்திளையனார் சன்னதி உள்ள முருகப் பெருமானுக்கு, நான்கு மாட வீதிகளை சுற்றி வலம் வந்து பக்தர்கள் புஷ்ப காவடி எடுத்தனர். மேள வாத்தியத்துடன் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை காவடி ஏந்தி பக்தி பரவசத்துடன் நடனமாடி வழிபட்டனர்.