திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயிலில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம் - 3 மணிநேரம் காத்திருந்து தரிசனம் செய்து வரும் பக்தர்கள்
Jan 29 2023 5:25PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
விடுமுறை நாளான இன்று திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் திருக்கோயிலில் பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர். அதிகாலை 4.30 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு உண்ணாமலை அம்மன் உடனாகிய அண்ணாமலையாருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டன. அதிகாலை முதல் பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று அண்ணாமலையார் மற்றும் உண்ணாமலை அம்மனை தரிசனம் செய்து வருகின்றனர். விடுமுறை தினங்களில் உள்ளூர் மற்றும் வெளியூர் பக்தர்கள் அதிக அளவில் வருகை புரிவது தற்போது அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.