திருச்செந்தூர் திருக்கோயில் ஆனி வருஷாபிஷேக விழா : அதிகாலை 4 மணிக்கு கோயில் நடை திறப்பு
Jul 6 2022 12:31PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் வெகு சிறப்பாக கொண்டாடப்படும் ஆனி வருஷாபிஷேக விழா, நாளை மறுநாள் கொண்டாடப்படுகிறது.
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் ராஜகோபுரம், ஆனி மாதம் சுவாதி நட்சத்திரத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டது. இதனை கொண்டாடும் வகையில், வருஷாபிஷேகம், நாளை மறுநாள் நடைபெறுகிறது. நாளை மறுநாள் அதிகாலை 4 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு, முதலில் விஸ்வரூப தரிசனமும், பின்னர் உதய மார்த்தாண்ட அபிஷேகமும் நடைபெறும். அதன் பின்னர், காலை 8.30 மணிக்கு மேல், கோபுர கலசங்கள் மற்றும் விமானங்களுக்கு புனித நீரால் அபிஷேகமும், சுவாமிக்கு சிறப்பு பூஜையும், சாயரட்ஷ பூஜையும் நடைபெறும். இரவில், சுவாமி குமார விடங்க பெருமான், தங்க மயில் வாகனத்தில் வீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெறும்.