உலகப் புகழ்பெற்ற பூரி ஜகன்னாதர் ஆலய தேர்த்திருவிழா : திருச்சியில் நடைபெற்ற தேரோட்டத்தில் ஏராளமானோர் பங்கேற்பு
Jul 2 2022 11:14AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
உலக புகழ் பெற்ற பூரி தேரோட்டம் நடைபெறும் நிலையில், திருச்சியில் உள்ள ஜெகன்னாதர் கோவில் தேரோட்டத்தில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.
ஒடிசாவின் புனித நகரமான பூரியில் ஜகந்நாதரின் புகழ்பெற்ற ரத யாத்திரை விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த யாத்திரைக்காக ஜகந்நாதர், தேவி சுபத்ரா மற்றும் பலராமர் ஆகிய மூன்று ரதங்களும் இழுக்கப்பட்டு ஸ்ரீமந்திராவின் சிங்க துவாராவின் முன் நிறுத்தப்பட்டுள்ளன. நாடு முழுவதும் இருந்து பல லட்சக்கணக்கான பக்தர்கள் திரண்டு வழிபாடு செய்யும் இந்நிகழ்வானது 42 நாட்கள் நடைபெறும். இந்நிலையில் திருச்சியில் பூரி ஜகன்னாதர் ஆலய விழாவைப் போல நடைபெற்ற ரதயாத்திரையில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று வழிபாடு நடத்தினர்.