பத்ரிநாத், கேதார்நாத் கோவில்களில் யாத்ரீகர்களின் எண்ணிக்கை தலா 1,000 ஆக அதிகரிப்பு : உத்தர்காண்ட் அரசு
May 11 2022 3:51PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
பத்ரிநாத், கேதார்நாத் உள்ளிட்ட கோவில்களிலும் அனுமதிக்கப்படும் யாத்ரீகர்களின் எண்ணிக்கை தலா 1,000 ஆக உயர்த்தப்படுவதாக உத்தர்காண்ட் அரசு அறிவித்துள்ளது.
உத்தரகண்டில், கங்கோத்ரி, யமுனோத்ரி, கேதார்நாத், பத்ரிநாத் ஆகிய நான்கு கோவில்களுக்கும், ஆண்டுதோறும் ஏராளமான பக்தர்கள் யாத்திரையாக செல்வது வழக்கம். "Char Dham" என அழைக்கப்படும் இந்த யாத்திரைக்கு, கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இந்த புனித தலங்களுக்கு பயணிக்கும் யாத்ரீகர்களின் எண்ணிக்கை குறைக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், தற்போது கொரோனா தொற்கு குறைந்துள்ள நிலையில், Char Dham யாத்திரைக்கான யாத்ரீகர்களின் எண்ணிக்கையை, தலா 1,000 ஆக உயர்த்தப்படுவதாக உத்தர்காண்ட் அரசு அறிவித்துள்ளது. இதன் மூலம், ஒரு நாளில் 16 ஆயிரம் பக்தர்கள் பத்ரிநாத்தை தரிசிக்கலாம் என்றும், 13 ஆயிரம் பேர் கேதார்நாத்தில் தரிசனம் தரிசனம் செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.