திருச்சியில் ஞீலி வனேஸ்வரர் திருக்கோவிலில் சித்திரை திருவிழா கொடியேற்றம்
May 6 2022 12:47PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
திருச்சி மாவட்டத்தில் அமைந்துள்ள திருப்பைஞ்ஞீலி விசாலாட்சி உடனுறை அருள்மிகு ஞீலி வனேஸ்வரர் திருக்கோவிலில் சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் வட்டம் திருப்பைஞ்ஞீலியில் அமைந்துள்ளது அருள்மிகு விசாலாட்சி உடனுறை ஞீலி வனேஸ்வரர் திருக்கோவில் மிகவும் பிரசித்தி பெற்றதாகும். திருமணம் ஆகாதவர்கள் இங்கு வந்து "வாழைபரிகாரம்" செய்தால் திருமணத்தடை நீங்குவதாக ஒரு நம்பிக்கை உள்ளது. இத்திருக்கோவிலில் சித்திரை பெருந்திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. கொடிப் பட்டம் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு, கொடிமரத்திற்கு பால், தயிர், சந்தனம் , மஞ்சள், உள்ளிட்ட அபிஷேகப் பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகளுக்கு பிறகு கொடியேற்றப்பட்டது.
அருள்மிகு விசாலாட்சி அம்மனும், ஞீலி வனேஸ்வரரும் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி தந்தனர். இந்நிகழ்வில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை வழிபட்டனர். விழாவின் முக்கிய நிகழ்வான திருத்தேரோட்டம் மே 13ம் தேதி நடைபெற உள்ளது.