சென்னை வடபழனி முருகன் கோவில் குடமுழுக்கு விழா - கோபுரங்களுக்கு பூஜை செய்யப்பட்டு புனித நீர் ஊற்றி வழிபாடு
Jan 23 2022 11:29AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
சென்னை வடபழனி முருகன் கோவில் குடமுழுக்கு விழா விமரிசையாக நடைபெற்றது. கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கை காரணமாக பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை.
சென்னை வடபழனியில் உள்ள புகழ்பெற்ற முருகன் கோவிலில், கடந்த 2007-ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. 15 ஆண்டுகளுக்குப் பின்னர், தற்போது, 2 கோடியே 56 லட்சம் ரூபாய் செலவில் கோவில் புதுப்பிக்கப்பட்டது. தங்கமுலாம் பூசப்பட்ட 7 தங்க கலசங்கள், ராஜகோபுரத்தில் பொருத்தப்பட்டன. யாக சாலை பூஜைகளைத் தொடர்ந்து இன்று குடமுழுக்கு விழா நடைபெற்றது. கோபுர கலசங்களுக்கு பூஜைகள் நடத்தப்பட்டு புனித நீர் ஊற்றப்பட்டு குடமுழுக்கு நடைபெற்றது.
குடமுழுக்கு நடைபெற்றபோது, கருடன்கள் வானில் வட்டமடித்த காட்சியை காணமுடிந்தது.
கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக பக்தர்கள் யாரும் குடமுழுக்கு விழாவிற்கு அனுமதிக்கப்படவில்லை. 108 சிவாச்சாரியார்கள், நிர்வாகிகள் பங்கேற்றனர்.
இன்று மாலை திருக்கல்யாண நிகழ்ச்சி நடைபெறுகிறது. தொடர்ந்து முருகபெருமான், ஆலயத்தை வலம் வந்து, பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார்.