3 நாட்கள் தொடர்ந்து கோயில்கள் மூடப்படுவதால் பக்தர்கள் வேதனை : வியாபாரம் பாதிக்கப்படுவதாக வியாபாரிகள் கவலை - வாழ்வாதாரத்தை இழந்து தவிப்பதாக வியாபாரிகள் வேதனை
Jan 21 2022 12:36PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கொரோனா பரவல் காரணமாக, வெள்ளி, சனி, ஞாயிறுக்கிழமைகளில் கோவில்கள் மூடப்பட்டதால் பக்தர்கள், பூக்கடை வியாரிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.
கொரோனா தொற்று பரவி வருவதன் காரணமாக கடந்த 6 ஆம் தேதி முதல் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, வெள்ளி, சனி மற்றும் ஞாயிறு கிழமைகளில் கோயில்கள் மூடப்பட்டு வருகின்றன. கடந்த வாரம் பொங்கல் மற்றும் தைப்பூசத்தை ஒட்டி 5 நாட்கள் கோயில்கள் மூடப்பட்டன. அந்த வகையில், வெள்ளி, சனி, ஞாயிறுக்கிழமைகளில் கோவில்கள் மூடப்பட்டதால் கவலையடைந்துள்ள பக்தர்கள், வைகுண்ட ஏகாதசி முடிவதற்குள் கோவில்களை மூடுவதால், கடவுளை தரிசிக்க முடியவில்லை என வேதனை தெரிவித்தனர். திமுக அரசு வந்த பிறகு 200 கோவில்கள் இடிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள பக்தர்கள், தமிழக அரசு இந்துக்களுக்கு மரியாதை கொடுக்காமல் அப்பாட்டமாக பேசி வருவதாக குற்றம்சாட்டினர்.
கோவில்களுக்கு வாரம் 3 நாட்களுக்கு ஊரடங்கு போடுவதால் வியாபாரம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இதனால் வாழ்வாதாரம் இன்றி தவிக்கும் சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளதாகவும் வியாபாரிகள் கவலை தெரிவித்துள்ளனர். பக்தர்கள் வராததால் வியாபாரம் இல்லாமல் அனைத்து பொருட்களும் வீணாகும் சூழல் ஏற்பட்டுள்ளதாக வேதனை தெரிவித்தனர்.