ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில், வைகுண்ட ஏகாதசி பகல்பத்து 2-ம் நாள் திருவிழா - சவுரிக் கொண்டை அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி தந்த நம்பெருமாள்
Dec 5 2021 10:31AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் திருக்கோயிலில், வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு பகல்பத்து திருவிழா நடைபெற்று வருகிறது. 2-ம் நாள் உற்சவத்தில், நம்பெருமாள் சவுரி கொண்டை அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.
ஸ்ரீரங்கம் கோயிலில் வைகுண்ட ஏகாதசி எனப்படும் சொர்க்கவாசல் திருவிழா நேற்று முன்தினம் திருநெடுந்தாண்டகத்துடன் தொடங்கியது. 21 நாட்கள் நடைபெறும் இவ்விழாவின் பகல்பத்து திருநாள் நேற்று தொடங்கியது. 2-ம் நாளான இன்று காலை, நம்பெருமாள் சவுரிகொண்டை, தங்க பஞ்சாயுத மாலை, திருமார்பில் மகாலட்சுமி பதக்கம், வைர அபயஹஸ்தம், நெல்லிக்காய் சரம், புஜகீர்த்தியில் ரெட்டை பட்சி பதக்கம் உள்ளிட்ட திருவாபரணங்கள் சூடினார். மூலஸ்தானத்தில் தங்கப்பல்லக்கில் மூலஸ்தானத்திலிருந்து புறப்பட்டு, அர்ச்சுன மண்டபத்தில் எழுந்தருளினார்.
வைகுண்ட ஏகாதசி திருவிழாவின் முக்கிய நிகழ்வான, வரும் 14-ம் தேதி அதிகாலை 4 மணி 45 நிமிடங்களில் நடைபெறவுள்ளது.