புரட்டாசி சனிக்கிழமை - காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோயிலில் திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம்
Oct 16 2021 4:10PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோயிலில், புரட்டாசி சனிக்கிழமையையொட்டி பெருந்திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், காலை ஆறு மணி முதலே, பக்தர்கள் குவிந்தனர். தொடர் மழை காரணமாக, அத்திவரதர் வைக்கப்பட்டுள்ள அனந்த சரஸ் குளத்தில் தண்ணீர் முழுவதுமாக நிரம்பியுள்ளதால், பக்தர்கள் பார்த்து ரசித்தனர்.