திண்டுக்கல்: விஜயதசமியை முன்னிட்டு மழலைகளுக்கு வித்தியாரம்பம் நிகழ்ச்சி
Oct 15 2021 12:05PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
திண்டுக்கல் ஆர்.எம் காலனியிலுள்ள தனியார் பள்ளியில் விஜயதசமியை முன்னிட்டு மழலைகளுக்கு வித்தியாரம்பம் நடைபெற்றது. நவராத்திரி விழாவை முன்னிட்டு அமைக்கப்பட்டிருந்த கொலு மண்டபத்தில், கோவில் அர்ச்சகர் மந்திரம் ஓதி வித்யாரம்பத்தை தொடங்கி வைத்தார். நெல் மணிகளில் முனை முறியா மஞ்சள் முனை கொம்பில், பெற்றோர்கள் மடியில் அமர்ந்து குழந்தைகள் ஸ்ரீ என்னும் எழுத்திலிருந்து முதலாக எழுதத் தொடங்கினார்கள். விஜயதசமி அன்று பள்ளியில் குழந்தைகள் சேர்க்கப்படுவார்கள் என்பதால் பள்ளி வளாகம் முழுவதும் கிருமிநாசினி தெளித்து தயார்படுத்தப்பட்டிருந்தது.