திருப்பதியில் கருட வாகன சேவை : பட்டு வஸ்திர சமர்ப்பணம் செய்ய முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி வருகை
Oct 12 2021 11:14AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
திருப்பதியில் நடைபெற்ற கருட வாகன சேவையை முன்னிட்டு, பட்டு வஸ்திர சமர்ப்பணம் செய்வதற்காக, ஆந்திர மாநில முதலமைச்சர் திரு. ஜெகன் மோகன் ரெட்டி வருகை தந்தார்.
திருப்பதியில், பிரமோற்சவத்தை முன்னிட்டு, சுவாமி தரிசனம் செய்ய வருகை தந்த ஆந்திர மாநில முதலமைச்சர் திரு. ஜெகன் மோகன் ரெட்டி, அங்குள்ள முடநீக்கு மருத்துவமனையில் புதிதாக கட்டப்பட்ட குழந்தைகள் நல பிரிவை துவக்கி வைத்தார். இதனைத்தொடர்ந்து, மாலை 4 மணி அளவில், 25 கோடி ரூபாய் செலவில் திருப்பதி-திருமலை இடையே உள்ள, புதுப்பிக்கப்பட்ட பக்தர்கள் நடந்து செல்லும் வழியை திறந்து வைத்தார்.