திருமலை ஸ்ரீ வெங்கடாஜலபதி ஆலய வருடாந்திர பிரம்மோற்சவ 5-ம் நாள் விழா - மோகினி அலங்காரத்தில் மலையப்பசுவாமி பக்தர்களுக்கு காட்சியளித்தார்
Oct 11 2021 6:26PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
திருமலை ஸ்ரீ வெங்கடாஜலபதி ஆலய வருடாந்திர பிரம்மோற்சவத்தின் 5-ம் நாளில், மோகினி அலங்காரத்தில் மலையப்பசுவாமி எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
திருமலை திருப்பதி ஸ்ரீ வெங்கடாஜலபதி ஆலயத்தின் வருடாந்திர பிரம்மோற்சவ விழா கடந்த 7-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. மலையப்ப சுவாமி, நாள்தோறும் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி அருள்பாலித்து வருகிறார். பிரமோற்சவ விழாவின் 5-ம் நாளான இன்று காலை மலையப்ப சுவாமி, மோகினி அலங்காரத்தில் எழுந்தருளினார். மலையப்ப சுவாமி, ஜெகன் மோகினி அலங்காரத்தில், ஆண்டாள் கிளி மாலை அணிந்தபடி, பல்வேறு மணம் கமழும் மலர்மாலைகளுடனும், நவரத்தின ஆபரணங்களுடனும் ரங்கநாயகி மண்டபத்தில் திருக்காட்சி தந்தருளினார்.