நாடு முழுவதும் விநாயகர் சிலை கரைப்பு தொடர்பான விபத்துகள் - 16 பேர் நீரில் மூழ்கி உயிரிழப்பு
Sep 20 2021 12:12PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
நாடு முழுவதும் விநாயகர் சிலைகளைக் கரைக்கும்போது ஏற்பட்ட விபத்துகளில் 16 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.
கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக விநாயகர் சதுர்த்தியை பொதுவெளியில் கொண்டாட மஹாராஷ்ட்ரா, தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்கள் தடை விதித்தன. இதையடுத்து பெரிய அளவில் விநாயகர் சிலைகளை பொதுவெளியில் வைக்காமல் வீடுகளிலேயே சிறிய விநாயகர் சிலைகளை வைத்து மக்கள் வழிபட்டனர். இந்நிலையில், நாடு முழுவதும் விநாயகர் சிலைகளைக் கரைக்கும்போது 4 மாநிலங்களில் 16 பேர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உத்தரப்பிரதேசத்தில் பாரபங்கி மாவட்டத்தில் கல்யாணி ஆற்றில் விநாயகர் சிலையைக் கரைக்க முயன்ற ஒரு பெண் மற்றும் அவரது இரு மகன்கள் உள்பட 5 பேர் ஆற்றில் மூழ்கி பலியாகினர். இதேபோல், மத்தியப்பிதேசத்தில் பிந்த், ராஜ்கர் மற்றும் சத்னா மாவட்டங்களில் 8 சிறுவர்கள் நீரில் மூழ்கி மரணமடைந்தனர். ராஜஸ்தான் மாநிலத்தில் இருவரும், மஹாராஷ்ட்ராவில் ஒருவரும் விநாயகர் சிலைகளைக் கரைக்கும்போது உயிரிழந்தனர்.