திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோயில் உண்டியல் வருவாய் எண்ணிக்கை
Jul 23 2021 11:31AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோயில் உண்டியல் எண்ணப்பட்டது. பக்தர்கள் செலுத்திய காணிக்கைகளை கோயிலின் மண்டபத்தில், கோயில் இணை ஆணையர் திரு. சி. கல்யாணி முன்னிலையில், தன்னார்வலர்கள், கோயில் பணியாளர்கள் உள்ளிட்டோர் எண்ணினர். கடந்த 16 நாட்களாக கோயில் உண்டியலில் செலுத்திய காணிக்கைகளை எண்ணியதில், ஒரு கோடியே 32 லட்சம் ரூபாய் ரொக்கம், 4 கிலோ 730 கிராம் தங்கம், 3 கிலோ 880 கிராம் வெள்ளி, 46 அயல்நாட்டு நோட்டுகளும் கிடைக்கப் பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.