ஆடி முதல் செவ்வாயையொட்டி காரைக்குடியில் அமைந்துள்ள முத்துமாரியம்மன் கோவிலில் சிறப்பு பூஜை
Jul 20 2021 6:57PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் மீனாட்சிபுரம் பகுதியில் அமைந்துள்ள முத்துமாரி அம்மன் கோவிலில் ஆண்டுதோறும் ஆடி முதல் செவ்வாய் விஷேசமாக கொண்டாடப்படும். ஆனால் கொரோனா தொற்று பரவல் காரணமாக குறைந்த அளவிலான பக்தர்கள் மட்டுமே கலந்து கொண்டனர். இந்நிலையில் ஆடி முதல் செவ்வாய்கிழமையை முன்னிட்டு அம்மனுக்கு சிறப்பு பூஜைகளும், அபிஷேகமும் நடைபெற்றது. தொடர்ந்து தங்க கவசத்தில் முத்துமாரி அம்மன் காட்சியளித்தார்.