மதுரை அழகர்கோவில் கள்ளழகர் திருக்கோயிலில் பக்தர்களின்றி சித்திரை திருவிழா
Apr 21 2021 8:15PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
மதுரை அழகர்கோவில் கள்ளழகர் திருக்கோயிலில் இந்தாண்டும் கொரோனா பரவல் காரணமாக சித்திரை திருவிழா ரத்து செய்யபட்டு ஆலய வளாகத்திற்குள் வாகன காட்சியாக விழா நடைபெறும் என கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. வரும் 23-ம் தேதி முதல், 30-ம் தேதி வரை நடைபெறும் விழாக்களில் சுவாமி புறப்பாடு, வாகனங்களில் எழுந்தருளுதல், கருட சேவை, மண்டூக முனிவருக்கு சாப விமோசனம் அளித்தல், உள்ளிட்ட வைபவங்களில் பக்தர்களுக்கு அனுமதியில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், மேற்கண்ட நிகழ்வுகளை இணையத்தில் பார்த்துக் கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.