ரமலான் பகலில் வருவதால் இரவு ஊரடங்கால் பிரச்சனை இல்லை - இந்திய ஹஜ் கமிட்டி தலைவர் அபுபக்கர் கருத்து
Apr 20 2021 2:31PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கொரோனா தடுப்பு தொடர்பாக அரசு எடுக்கும் நடவடிக்கைகளுக்கு முழு ஒத்துழைப்பு அளிக்கப்படும் என இந்திய ஹஜ் கமிட்டி தலைவர் அபூபக்கர் தெரிவித்துள்ளார்.
தலைமை செயலகத்தில் தமிழக தலைமை செயலாளர் ராஜீவ் ரஞ்சனை சந்தித்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அபுபக்கர், ரமலான் திருநாள் பகலில் வருவதால் இரவு நேர ஊரடங்கால் எந்த பிரச்சனையும் இல்லை என தெரிவித்தார். மே 9ம் தேதி அனைத்து பள்ளி வாசல்களில் நடைபெறும் சிறப்பு தொழுகைகளுக்கு அரசு அனுமதி அளிக்க வேண்டுமென, கோரிக்கை வைத்துள்ளதாகவும் அவர் கூறினார்.