ஏழுமலையான் திருக்கோயிலில் யுகாதி ஆஸ்தானம் - கருடாழ்வார் சன்னதி அருகே உற்சவர் மலையப்ப சுவாமி எழுந்தருளல்
Apr 13 2021 7:13PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
யுகாதி பண்டிகையை முன்னிட்டு, திருப்பதி ஏழுமலையான் கோயிலில் கருடாழ்வார் சன்னதி அருகே, உற்சவர் மலையப்பசுவாமி எழுந்தருளினார்.
தெலுங்கு வருடப்பிறப்பு தினமான யுகாதிப் பண்டிகை கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது. இதையொட்டி திருப்பதி திருமலையில் அமைந்துள்ள ஏழுமலையான் திருக்கோயிலில், யுகாதி ஆஸ்தானம் நடத்தப்பட்டது. இதையொட்டி, கோயில் முழுவதும் கண்கவர் மின்விளக்குகள் மற்றும் மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தன. யுகாதியை முன்னிட்டு, உற்சவர் மலையப்பசுவாமி, திருக்கோயிலில் உள்ள கருடாழ்வார் சன்னதி அருகே எழுந்தருளி அருள்பாலித்தார். இதையடுத்து, ஏழுமலையானின் சேனைத் தலைவனான சேனை முதல்வன் எழுந்தருளிய நிலையில், யுகாதி ஆஸ்தானம் நடைபெற்றது. இதனிடையே, தேவஸ்தான வேத பண்டிதர்கள், புதுவருட பஞ்சாங்கம் படித்து, இந்த ஆண்டுக்கான பலன்களைத் தெரிவித்தனர்.