ஈரோடு பெரிய மாரியம்மன் கோயில் கம்பம் பிடுங்கும் விழா
Apr 12 2021 12:43PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
ஈரோடு பெரிய மாரியம்மன் வகையறா திருக்கோயில்களில், குண்டம் மற்றும் கம்பம் விழா, கடந்த 6ஆம் தேதி பூச்சாட்டுதலுடன் தொடங்கி நடைபெற்று வந்தது. பெரிய மாரியம்மன், நடுமாரியம்மன், சின்ன மாரியம்மன் கோவில்களில் நடப்பட்ட கம்பம் பிடுங்கும் நிகழ்வானது, பக்தர்கள், பொதுமக்கள் இன்றி காவல்துறையின் கட்டுப்பாட்டில் நடைபெற்றது. கம்பங்கள் மினி ஆட்டோவில் ஏற்றப்பட்டு, மணிக்கூண்டு பகுதியில் ஒன்றாக இணைந்து பின்பு லாரியின் மூலமாக காவிரி ஆற்றங்கரையில் எடுத்துச் செல்லப்பட்டது. ஆற்றங்கரையில் பூஜைகள் செய்யப்பட்ட பின் மூன்று கம்பங்களும் ஆற்றில் விடப்பட்டது.