ராமநாதபுரம் பரமக்குடியைச் சேர்ந்த பக்தர்கள் திருச்செந்தூருக்கு மிதிவண்டி யாத்திரை : 41-வது ஆண்டாக 150-க்கும் மேற்பட்டோர் மிதிவண்டியில் வந்து சுவாமி தரிசனம்
Mar 7 2021 4:28PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் இருந்து நூற்றுக்கணக்கான பக்தர்கள், திருச்செந்தூர் முருகன் கோயிலுக்கு மிதிவண்டி யாத்திரையாக வந்து சுவாமி தரிசனம் செய்தனர்.
பரமக்குடியைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான பக்தர்கள், திருச்செந்தூர் முருகன் கோயிலுக்கு ஆண்டுதோறும் மிதிவண்டியில் வந்து தரிசனம் செய்வது வழக்கம். 41வது ஆண்டாக இம்முறையும், 150க்கும் மேற்பட்ட பக்தர்கள், திருச்செந்தூர் முருகன் கோயிலுக்கு தூத்துக்குடி வழியாக மிதிவண்டியில் யாத்திரையாக வந்தனர்.