சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோயிலில் அனுமன் ஜெயந்தி விழா - சிறப்பு ஏற்பாடுகள்
Jan 11 2021 4:08PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கன்னியாகுமரி மாவட்டத்தில் பிரசித்திபெற்ற சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோயிலில், ஆஞ்சநேயர் ஜெயந்தி விழாவை முன்னிட்டு பக்தர்களுக்கு இலவசமாக வழங்கும் வகையில் லட்டு தயாரிக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.
சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோயிலில் உள்ள 18 அடி உயரம் கொண்ட ஆஞ்சநேயர் சன்னதி அமைந்துள்ளது. இந்நிலையில், ஆஞ்சநேயர் ஜெயந்தி விழாவை முன்னிட்டு, பக்தர்களுக்கு லட்டு, தட்டுவடை, திருநீறு, குங்குமம் போன்ற பிரசாதங்கள் வழங்குவது வழக்கம். இதற்காக லட்டு தயாரிக்கும் பணியில் 100க்கும் மேற்பட்ட கோயில் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.
இதேபோல், திருச்சியில் பிரசித்திபெற்ற ஸ்ரீசஞ்சீவி ஆஞ்சநேயர் கோயிலில் அனுமன் ஜெயந்தி விழா, மகாசுதர்சன ஹோமத்துடன் தொடங்கியது. உலக நன்மை வேண்டி வேதவிற்பன்னர்களைக் கொண்டு வேள்வி நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று வழிபாடு செய்தனர். ஆஞ்சநேயருக்கு 10 ஆயிரத்து 8 வடைமாலை சாற்று வைபவம் நடைபெறவுள்ளது.