நாமக்கல்லில் களைகட்டும் ஆஞ்சநேய ஜெயந்தி விழா - ஒரு லட்சம் வடைகளை கோர்த்து மாலை தயாரிக்கும் பணி தீவிரம்
Jan 9 2021 2:23PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
ஆஞ்சநேய ஜெயந்தி விழாவையொட்டி, வட மாலைக்காக ஒரு லட்சத்து 8 வடைகள் தயாரிக்கும் பணி நாமக்கல் ஆஞ்சநேயர் ஆலயத்தில் மும்முரமாக நடைபெற்று வருகிறது.
ஆண்டுதோறும் மார்கழி மாதம், மூல நட்சத்திரம், சர்வ அமாவாசை தினத்தில், ஆஞ்சநேயர் ஜெயந்தி விழா கொண்டாடப்படுகிறது. இதன்படி, வரும் 12ம் தேதி, ஆஞ்சநேயர் ஜெயந்தி விழாவையொட்டி நாமக்கல்லில் பிரசித்திபெற்ற 18 அடி உயர ஆஞ்சநேயர் சுவாமி திருக்கோயிலில், சுவாமிக்கு சாற்றுவதற்காக, ஒரு லட்சத்து எட்டு வடைகள் தயாரிக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. ஸ்ரீரங்கம் திரு.ரமேஷ் தலைமையில், 32 அர்ச்சகர்கள், கோயில் மண்டபத்தில், நான்கு நாட்கள் தங்கியிருந்து வடை தயாரிப்பு பணிகளை மேற்கொண்டுள்ளனர்.
இதனிடையே, ஆஞ்சநேயர் ஜெயந்தி விழாவுக்கு வருகை தரும் பக்தர்கள், கோயில் நிர்வாகத்தின் இணையதளம் மூலம் முன்பதிவு செய்ய வேண்டும் என்றும், சமூக இடைவெளியை பின்பற்றி, காலை 5 மணிமுதல், இரவு 9 மணி வரை அனுமதிக்கப்படுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.