சபரிமலை அய்யப்பன் கோவிலில் கூடுதல் பக்தர்களை அனுமதிக்க வேண்டும் : கேரள அரசுக்கு உயர்மட்டக்குழு பரிந்துரை
Nov 28 2020 10:34AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
சபரிமலை கோவிலுக்கு கூடுதல் பக்தர்களை அனுமதிக்க கேரள அரசுக்கு உயர்மட்டக்குழு பரிந்துரை செய்துள்ளது. இதனால் இன்னும் ஓரிரு நாளில் இதற்கான முறைப்படி அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கொரோனா பரவல் காரணமாக சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு 7 மாதங்களாக பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை. மண்டல, மகரவிளக்கு பூஜையையொட்டி கடந்த 16-ந் தேதி முதல் கொரோனா கட்டுப்பாடுகளுடன் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வருகிறார்கள். அதுவும் ஒரு நாளைக்கு 1000 பக்தர்கள், சனி, ஞாயிற்றுக்கிழமையில் 2 ஆயிரம் பக்தர்கள் என நிர்ணயிக்கப்பட்டு பக்தர்கள் இருமுடி கட்டுடன் அய்யப்பனை தரிசனம் செய்து வருகிறார்கள். இந்த நிலையில் கூடுதல் பக்தர்களை அனுமதிப்பது தொடர்பாக கேரள தலைமை செயலாளர் தலைமையிலான உயர்மட்டக்குழு அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது.