திருவண்ணாமலை கோவில் கார்த்திகை தீபத் திருவிழா : அண்ணாமலையார் மற்றும் உண்ணாமுலையம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனைகள்
Nov 23 2020 4:52PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் கார்த்திகை தீப திருவிழா கடந்த 20-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி சிறப்பாக நடைபெற்று வருகிறது. காலை மற்றும் இரவு வேளைகளில் பஞ்ச மூர்த்திகள் மாட வீதிகளில்வ வலம் ந்து பக்தர்களுக்கு காட்சியளிப்பது வழக்கம். 4ம் நாளான இன்று அதிகாலை அண்ணாமலையார் கோயிலின் நடை திறக்கப்பட்டு அண்ணாமலையார் மற்றும் உண்ணாமுலையம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனைகள் செய்யப்பட்டது. பின்னர் சிறப்பு வாகனத்தில் எழுந்தருளினார்.