புகழ்பெற்ற பழனி முருகன் கோயிலில் குவிந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் - விடுமுறை தினம் மற்றும் முகூர்த்த நாள் என்பதால் அதிகரித்த கூட்டம்
Oct 18 2020 12:54PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதால், திண்டுக்கல் மாவட்டம் பழனி தண்டாயுதபாணி திருக்கோயிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.
புரட்டாசி மாதம் முடிந்த நிலையில் ஐப்பசி மாதம் நேற்று தொடங்கியது. இன்று முகூர்த்த நாள் என்பதால், பழனியில் பல இடங்களிலும் திருமண நிகழ்ச்சிகள் நடைபெற்றன. ஞாயிறு விடுமுறை காரணமாக, பழனி தண்டாயுதபாணி கோயிலில், இன்று அதிகாலைமுதல் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய குவிந்தனர். குடமுழுக்கு நினைவரங்கில் பக்தர்கள் நீண்ட வரிசையில் மலையேறுவதற்காக முகக்கவசத்துடன் காத்திருந்தனர். தானியங்கி சானிடைசர், தானியங்கி வெப்பம் கண்டறியும் கருவி போன்றவை வாயிலிலேயே அமைக்கப்பட்டிருந்தது. பக்தர்களின் உடல் வெப்பம் கணினி மூலமும் கண்டறியப்பட்டது. அதிக வெப்பம் உடலில் உள்ளவர்கள் மற்றும் 10 வயதுக்கு குறைவான வயதுடையவர்கள், மலையேற அனுமதி மறுக்கப்பட்டது. குழந்தைகளுடன் வந்திருந்தவர்கள் குடமுழுக்கு நினைவரங்கம் முழுக்க நிறைந்திருந்தனர்.