திருச்சி குணசீலம் பிரசன்ன வெங்கடாஜலபதி கோயிலில் பிரம்மோற்சவ விழா
Sep 24 2020 12:45PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
திருச்சி மாவட்டம் குணசீலம் பிரசன்ன வெங்கடாஜலபதி கோயிலில் பிரம்மோற்சவ விழா விமரிசையாக நடைபெற்றது. விழாவின் 6வது நாளான நேற்றிரவு, பெருமாள் கருட வாகன சேவை நடைபெற்றது. தங்க கருடவாகனத்தில் சுவாமி எழுந்தருள, பரம்பரை நிர்வாக அறங்காவலர் பிச்சுமணி அய்யங்கார் தலைமையில் பூஜைகள் நடத்தப்பட்டு, அதனைத் தொடர்ந்து வெளிப் பிரகாரத்தில் வீதி உலா வந்து சேவை சாதித்தார். முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் வரும் 27ம் தேதி நடைபெறுகிறது.