திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கத்தில் வருடத்திற்கு ஒருமுறை மட்டுமே நடைபெறும் தாயார் திருவடி சேவை நடைபெற்றது
Sep 23 2020 8:11PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கத்தில் வருடத்திற்கு ஒருமுறை மட்டுமே நடைபெறும் தாயார் திருவடி சேவை நடைபெற்றது. இதையொட்டி ரெங்கநாயகி தாயார் மாலை 3 மணிக்கு மூலஸ்தானத்திலிருந்து வெண்பட்டு உடுத்தி, கிளிமாலை, ஏலக்காய் ஜடை மாலை மற்றும் ஆபரணங்கள் சூடியபடி தங்க பல்லக்கில் புறப்பட்டு கண்ணாடி அறைக்குச் சென்றார். பின்னர் அரையர்கள் சேவை கண்டு தங்கமுலாம் பூசப்பட்ட கொலுமண்டபத்தில் பொற்பாதங்கள் தெரிய எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார்.