கேரளாவில் வரும் 30-ம் தேதி வரை கோவில்களுக்கு செல்ல மக்களுக்கு தடை
Jun 18 2020 1:39PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கேரள மாநிலத்தில், இன்று முதல் வரும் 30-ம் தேதி வரை, கோவில்களுக்கு செல்ல மக்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. கொரோனா ஊரடங்கு காரணமாக, கடந்த இரண்டு மாதங்களாக கோவில்கள் மூடப்பட்டிருந்த நிலையில், ஜூன் 8-ம் தேதி முதல் கோவில்கள் திறக்கப்பட்டன. இந்நிலையில், தேவசம்போர்டு வெளியிட்டுள்ள அறிக்கையில், மாநிலத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால், இன்று முதல் வரும் 30-ம் தேதி வரை கோவில்களுக்கு செல்ல பொதுமக்களுக்கு தடை விதிக்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.