பக்தர்களின்றி நடைபெற்ற மதுரை மீனாட்சியம்மன் - சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் - சிவாச்சாரியார்கள் மட்டுமே பங்கேற்று நடத்தினர்
May 4 2020 5:01PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
மதுரை மீனாட்சி-சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் இன்று பக்தர்களின்றி எளிமையாக நடைபெற்றது.
பிரசித்தி பெற்ற மதுரை மீனாட்சி-சுந்தரேஸ்வரர் ஆலய சித்திரை பொது நிகழ்ச்சிகள் ஊரடங்கால் ரத்து செய்யப்பட்டன. இந்த நிலையில், ஆலய நிகழ்ச்சிகள் தடைபடாமல் இருக்க எளிய முறையில் நடத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில்,
திருக்கல்யாணம் இன்று எளிமையாக நடைபெற்றது. பக்தர்களின்றி, 4 சிவாச்சாரியார்கள் மட்டும் திருக்கல்யாணத்தை நடத்தினர். அலங்கரிக்கப்பட்ட மணமேடையில் மீனாட்சி அம்மன் சுந்தரேஸ்வரருடன் எழுந்தருள விக்னேஷ்வர பூஜையுடன் விழா தொடங்கியது. புண்யாஹவாசனம், பஞ்ச கவ்யம் , சுவாமி அம்பாள் காப்பு கட்டுதல், மாலை மாற்றுதல், போன்ற நிகழ்ச்சிகளைத் தொடர்ந்து மீனாட்சி அம்மனுக்கு சுந்தரேசுவரர் மங்கல நாண் அணிவிக்கும் வகையில் திருக்கல்யாணம் நடத்தப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது.