கொரோனா வைரஸ் எதிரொலி - திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு பக்தர்கள் வர தற்காலிக தடை
Mar 19 2020 7:02PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக, திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு பக்தர்கள் வர தற்காலிகமாக தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் கொரோனா வைரஸ் தாக்கத்தால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. குறிப்பாக, பொது இடங்களில் அதிக அளவில் மக்கள் கூடுவதைத் தவிர்க்க வேண்டுமென மத்திய சுகாதாரத்துறை கேட்டுக்கொண்டுள்ளது. இந்நிலையில் திருப்பதி கோயிலில் காய்ச்சல், இருமல் உள்ளவர்கள் வருவதைத் தவிர்க்க வேண்டும் என்றும், அவ்வாறு வருபவர்களுக்கு பரிசோதனை செய்து சிகிச்சை அளிக்கவும் தேவஸ்தானம் சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், கொரோனா அச்சத்தை மீறியும் பக்தர்களின் வருகை நாளுக்குநாள் அதிகரித்ததால், ஏழுமலையான் கோயிலுக்கு பக்தர்கள் வர தற்காலிகமாக தடை விதிக்கப்படுவதாக தேவஸ்தானம் இன்று அறிவித்துள்ளது. இதையடுத்து, மேல்திருப்பதியில் உள்ள பக்தர்கள் கீழ்திருப்பதிக்குச் செல்லுமாறும் அறிவுறுத்தியுள்ளது.