ஈஸ்டர் பிரார்த்தனைக்கு நேரடியாக வரவேண்டாம் - தொலைக்காட்சியில் நேரலையாக காணும்படி கிறிஸ்தவ மக்களுக்கு வாடிகன் வேண்டுகோள்
Mar 16 2020 1:19PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
ஈஸ்டர் பிரார்த்தனைக்கு நேரடியாக வரவேண்டாம் என்றும், தொலைக்காட்சியில் நேரடியாக காணுங்கள் என்றும் வாடிகன் அறிவித்துள்ளது.
வாடிகனிலுள்ள புகழ்பெற்ற தேவாலயத்தில் நடைபெறும் பிரார்த்தனையில் எப்போதும் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பர். கொரோனா அச்சத்தால், யாரும் இல்லாமல், போப் மட்டும் தனிமையில் பிரார்த்தனை நடத்தினார். உலகம் முழுவதும் உள்ள ஊடகங்கள், ஒரு வரலாற்று சம்பவமாக அதை ஒளிபரப்பின.
இந்நிலையில், வைரஸ் அச்சம் காரணமாக பிரார்த்தனை செய்பவர்கள் இல்லாமலேயே பாரம்பரிய ஈஸ்டர் வார கொண்டாட்டங்கள், பிரார்த்தனைகள் நடத்தப்படும் என, வாடிகன் தெரிவித்துள்ளது. 'கொரோனா வைரசால், உலகளாவிய பொது சுகாதார அவசரநிலை ஏற்பட்டுள்ளதால், ஈஸ்டர் புனித வாரத்தின் அனைத்து வழிபாட்டு கொண்டாட்டங்களும், பிரார்த்தனைகளும் பார்வையாளர்களின்றி நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த மாதம் 12ம் தேதி வரையிலான பிரார்த்தனைகள், வாடிகனின் அதிகாரபூர்வ செய்தி இணையதளத்தில், நேரடியாக ஒளிபரப்பப்படும் என்றும், மக்கள் அதில் பிரார்த்தனையைக் காணலாம்' என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.