தூத்துக்குடி பனிமய மாதா ஆலய திருவிழா - மாதாவுக்கு பொன் மகுடம் சூட்டப்படும் நிகழ்ச்சி வெகு விமரிசையாக நடைபெற்றது
Aug 1 2014 12:03PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
தூத்துக்குடி பனிமய மாதா ஆலய திருவிழாவின் ஒரு பகுதியாக நடைபெற்ற மாதாவுக்கு பொன் மகுடம் சூட்டப்படும் நிகழ்ச்சி வெகு விமரிசையாக நடைபெற்றது.
தமிழகத்தில் உள்ள கிறிஸ்தவ தேவாலயங்களில் புகழ்பெற்ற தூத்துக்குடி பனிமயமாதா ஆலயம், ரோம் நகரின் பசிலிக்கா அந்தஸ்து பெற்றதாகும். இந்த ஆலயத்தின் ஆண்டுத் திருவிழா, கடந்த 26-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. திருவிழாவின் 6-ம் நாளான நேற்று, மாதாவுக்கு பொன்மகுடம் சூட்டப்பட்டு, பொதுமக்கள் மற்றும் கப்பல் மாலுமிகளுக்காக சிறப்பு கூட்டுத் திருப்பலி நடைபெற்றது. இதில் ஏராளமானோர் கலந்துகொண்டு பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.