கன்னியாகுமரி மாவட்டம் மண்டைக்காடு அருள்மிகு பகவதியம்மன் கோயிலில் நடைபெற்ற ஆவணி மாத பொங்கல் திருவிழாவில், ஏராளமான பெண்கள் தரிசனம் செய்தனர்
Sep 13 2014 11:02AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கன்னியாகுமரி மாவட்டம் மண்டைக்காடு அருள்மிகு பகவதியம்மன் கோயிலில் நடைபெற்ற ஆவணி மாத பொங்கல் திருவிழாவில், ஏராளமான பெண்கள் பங்கேற்று, அம்மனை தரிசனம் செய்தனர்.
பெண்களின் சபரிமலை என்று அழைக்கப்படும் மண்டைக்காடு பகவதியம்மன் கோயிலில், ஆண்டுதோறும் மாசி மாத கொடைவிழாவும், ஆவணி மாத அசுபதி பொங்கல் விழாவும் மிகவும் பிரசித்திப் பெற்றது. இந்த ஆண்டு பொங்கல் திருவிழா, கடந்த இருதினங்களுக்கு முன் தொடங்கியது. சுமங்கலி பூஜை உள்ளிட்ட விழாக்கள் நடைபெற்ற நிலையில், குமரி மாவட்டம் மட்டுமல்லாது, கேரள மாநிலத்திலிருந்து ஆயிரக்கணக்கான பெண்கள் கோவிலுக்கு வருகை தந்து, பொங்கல் வைத்து வழிபாடு நடத்தினர். இன்று, திருவிளக்கு பூஜையுடன் இவ்விழா நிறைவு பெறுகிறது.