"விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது மன்னிக்க முடியாத தவறு" : ஈரான் அதிபர் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு
Jan 12 2020 11:13AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
உக்ரைன் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது 'மன்னிக்க முடியாத தவறு' என ஈரான் அதிபர் தெரிவித்துள்ளார்.
உக்ரைன் நாட்டு விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதை ஒப்புக்கொண்ட ஈரான், அதற்கு மனிதத் தவறுதான் காரணம் எனக் கூறியிருந்தது. இந்தலையில், அந்நாட்டு ராணுவத்தினர் நடத்திய முதல்கட்ட விசாரணையில் இத்தகவல் தெரியவந்துள்ளதாகவும், விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது 'மன்னிக்க முடியாத' தவறு என்றும் அதிபர் ஹசன் ரெளஹானி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து முழு அளவில் விசாரணை நடத்தப்படும் என்றும், உயிரிழந்தவர்களுக்காகப் பிரார்த்திப்பதாகவும் அதிபர் ஹசன் ரெளஹானி தெரிவித்துள்ளார்.