2 ஆண்டுகளில் 20 ஆயிரம் ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் சிட்டி வங்கி : கடந்த ஆண்டு 4ஆம் காலாண்டில் மட்டும் ரூ. 14,900 கோடி நஷ்டம்
Jan 13 2024 11:44AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
சிட்டி வங்கி அடுத்த இரண்டு ஆண்டுகளில் 20ஆயிரம் ஊழியர்களை பணி நீக்கம் செய்ய உள்ளதாக அறிவித்துள்ளது. அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு செயல்படும் சிட்டி வங்கிக்கு உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் கிளைகள் உள்ளன. கடந்த ஆண்டின் நான்காவது காலாண்டில் மட்டும் 14ஆயிரத்து 900 கோடி ரூபாய் அளவுக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக கூறியுள்ள சிட்டி வங்கி தலைமையகம், நிறுவனத்தை மறுசீரமைக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. லாபத்தை அதிகரிக்கும் நோக்கில் அடுத்த இரண்டு ஆண்டுகளில் 20ஆயிரம் ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்படுவார்கள் என அறிவித்துள்ளது.